கடையில் விற்கும் இட்லி,தோசை மாவு ஸ்லோ பாய்ஸனா?
ஆமாம் இட்லி,தோசை மாவு ஸ்லோ பாய்ஸனாகி கொண்டிருக்கிறது என்பது உண்மைதான்.
ஒரு வயது குழந்தை முதல் தள்ளாடும் வயது வந்தவர்கள் வரை உண்பது "இட்லி, அல்லது தோசை" எனப்படும் தமிழனின் உணவு. இது போக நோயாளிகளும், அறுவை சிகிச்சை செய்தவர்களும் மற்றும் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும் எந்த ஒரு நோயாளிகளுக்கும் பரிந்துரைக்கும் முதல் உணவு வேகவைத்த இட்லிதான்.
இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்னை கொஞ்சமும் இல்லை .இதை கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. பிறகு என்னதான் பிரச்னை என்கிறீர்களா, அது பற்றிய கட்டுரைதான் இந்த பதிவு.
ஒரு காலத்தில் நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம். அதன் பின் அது மிக்ஸி மற்றும் எலக்ட்ரானிக் கிரைண்டராக மாறியது . வாழ்க்கை மாற்றங்களின் காரணத்தால் அதுவும் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகி போனது. சமீபமாக ஒரு முக்கிய திருப்பு முனையாக இட்லி தோசை மாவு ரெடியாக இப்பொழுது பட்டி தொட்டி, அண்ணாச்சி கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. இந்த கால மக்களுக்கு இட்லி மாவு அரைப்பது எப்படி என்பதே மறந்து போயிடுச்சு என்று சொல்லாம்
முன்பாவது திடீர் டிபன் ரவா உப்புமாதான். இப்பொழுது நம்ம வீட்டு சின்ன சிறுசுகளிடம் ஒடி போய் ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு தெருமுனை கடையில வாங்கி வா" என்று சொல்லி, அந்த மாவை இட்லி தோசை ஊத்தி மிச்சத்தை பிரிஜ்ஜில் வைத்து அது முடியும் வரை உபயோகிக்கிறார்கள். இதை பேச்சுலர்ஸ் மட்டுமல்ல குடும்ப பெண்களும் அன்றாடம் பயன்படுத்துகிறார்கள்
இந்த மாவு ஒரு உயிர்கொல்லி, ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோ நிறைய பேருக்கு தெரிவதில்லை. இதன் பயங்கரத்தை இங்கு பார்ப்போம் வாருங்கள்...
1. நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ப்ளோர் -Wet Flour (ஈர பத தோசை மாவிற்கு) ஐ எஸ் ஐ -ISI சான்றிதழ் கிடையாது. அதனால் இது எந்த ஒரு ஆராய்ச்சி கூடத்திலும் சோதனை செய்யப்படவில்லை.
2. இந்த மாவு சில மட்டமான அரிசியும், உளுந்தும், முக்கியமாக மாவுக்கு முன் காலத்தில் புண்ணுக்கு பயன்படும் போரிங் பவுடர் மற்றும் ஆரோட் மாவு போடுவதால் மாவு பூளிப்பு வாசைனை கண்டிப்பாக வராது. அது போக மாவும் பொங்கி நிறைய வரும் என்பதால் இதை செய்கின்றனர். இதே மாதிரி வீட்டில் அரைத்த மாவை ரெண்டு நாள் வைத்து மூணாவது நாள் முகர்ந்து பாருங்கள். புளிப்பு வாசைனையும் வரும். தோசையும் புளிக்கும். ஏனென்றால் மாவு பக்குவமாவதும், தயிர் உறைவதும் ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். இதை தவிர்க்கத்தான் கடையில் வாங்கும் மாவுக்கு 6 நாள் கியாரன்டி அளித்தும் ஒரு வாசனையும் வராமல் இருக்க காரணம் புண்ணிற்கு போடும் போரிங் பவுடரும், ஆரோட் மாவும்தான்.
3. முக்கியமாக இந்த கிரைண்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவது ஒரு நாளைக்கு 3 –- 6 மணி நேரம் அரைக்க முடியும். ஆனால் இவர்கள் 12- – 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு பல சமயம் இந்த சிறு கருங்கள் துகள்களால் தான் சமீபமாக நிறைய பேருக்கு சிறு நீரகத்தில் கல் உண்டாகிறது. ஒரு நல்ல கல்லின் ஆயுள் 12 மணி நேரம் அரைத்தால் வெறும் 6 மாதம் தான். கொத்தி போட்டாலும் அடுத்த மூன்று மாதம் தான்.
4. சமையல் செய்யும் ஆட்கள் கை அடிக்கடி கழுவ வேண்டும். நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு சுத்ததையும் இவர்கள் பேணுவதில்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கிருமிகள் இந்த மாவில்கெட்ட பேக்டிரியாக்கள் மற்றும் கிருமிகள் ஈஸியாக சேர்ந்து உங்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைந்து மற்றும் வாந்தி பேதி அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்க்கு இது தான் காரணம்.
5. கிரைண்டரை எனக்கு தெரிந்து பெண்கள் பயன்படுத்த தயக்கம், இரண்டு விஷயங்கள். 1. கிரைண்டரை சுத்தம் செய்யும் கஷ்டம் 2. கல்லை துாக்கி போட வேண்டும். ஒவ்வொரு முறையும், பெரிய குடும்பமென்றால் இது சாத்தியம். சிறு குடும்பம் அதனாலயே கடையில் மாவு வாங்குகிறது. ஆனால் இவர்கள் கிரைண்டரை ஒவ்வொரு மாவு முடிந்தும் கழுவுவதில்லை அதனால் அந்த கிரைண்டரின் கிருமி அதிகரித்து கொண்டே செல்கிறது. இவர்கள் வணிக ரீதியாக பயன்படுத்த ஒவ்வொரு முறையும் சூடு நீர்(Hot Water) உற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், இவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை கழுவினாலே அதிகம். மாவு பொருட்களினால் எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசிக்க கண்டிப்பாக சாத்தியம் உண்டு.
6. என்னதான் நல்ல அரிசி, உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர்தான் ஊற்றி மாவு அரைக்க வேண்டும். இவர்கள் எந்த தண்ணீரை உபயோகப்டுத்துகின்றனர் என்பது கடவுளுக்கு கூட தெரியாது. எனக்கு தெரிந்த தகவல் படி இவர்கள் போரிங் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை ஊற்றுகின்றனர். காரணம், உப்பு போட வேண்டிய அவசியமில்லை.
7. அந்த கால பார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கை ஆன்டி பயாடிக். உடம்பு உஷ்ணம், வாய் நாற்றம், அல்சர்க்கு இது ஒரு நல்ல பொருள். ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.
8. கிரைண்டரில் மாவு தள்ளிவிடும் அந்த பைபர் பிளாஸ்டிக்கை ஆறு மாதத்திற்க்கு அல்லது வருடத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ஆனால், இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள். அதனால் அந்த பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து அதுவும் இந்த மாவில்தான் விழுகிறது.
9. கிரைண்டர் ஒட அந்த மத்திய குழவியை இணைக்கும் ஒரு செயின். அந்த செயினை இவர்கள் கழட்டி ஒரு கார்பன்டம் பெல்ட்டை மாட்டி இருப்பார்கள். ஒன்று சத்தம் வராமல் இருபதற்கும் மற்றும் மாவை கையால் தள்ளி விடாமல் அரைக்கும் டெக்னிக்கிற்காக. அந்த பெல்ட் தண்ணீர் பட்டு பட்டு அந்த பெல்ட் துகள்களும் மாவில்தான் விழுகிறது.
10. இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை செய்கின்றனர். நமது தமிழ் நாட்டு கிளைமேட்படி இதை பிரிட்ஜில் தான் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை கட்டுபடுத்த முடியும். ஆனால் நம்மூர் கடைகளில் கரண்ட் கட் பிரச்னையில் இந்த மாவு கண்டிப்பாக பாய்ஸனாகிறது.
இந்த மாவில் நிறைய இடங்களில் இப்பொழுது பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிறைச்சிகளில் காணப்படும் ஈகோலி (E-COLI) எனும் பாக்டீரியா பரவி சிலருக்கு உடனே பிரச்னையும், சிலருக்கு இந்த மாவுகள் ஸ்லோ பாய்ஸனாகவும் உருவாகிறது. இந்த ஈகோலி - 24 மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால்தான் கொஞ்சமாவது கட்டுப்படும்.
அதனால் தயவு செய்து விற்பனை செய்யும் மாவில் 6 நாள் கியாரண்டியில் ஈரமான இட்லி, தோசை மாவை கண்டிப்பாக வாங்குவதை தவிருங்கள். உலர்ந்த மாவு பரவாயில்லை. இதே மாதிரி சிலர் மாவரைத்து நான்கு அல்லது ஐந்து பேர் ஷேர் செய்யும் தாய்மார்களும் கண்டிப்பாக கவனம் தேவை.
இப்பொழுது இது ஒரு அங்கிகரிக்கபட்ட தொழில் அல்ல. அதனால் மாநகராட்சி ரெய்டு செய்து மாவு அரைக்கும் இடங்களில் எல்லாம் கையகப்படுத்துகிறது. என்னதான் கையகப்படுத்தினாலும் எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது அல்லவா....! வெந்த இட்லியிலும் சில வேகாத விஷயங்கள் இது.
உண்மையை போட்டு உடைக்கும்
உங்கள் குத்தூசி
முன்பு தமிழ் நாளிதழில் வந்த செய்தியை வைத்து இந்த பதிவு எழுதப்பட்டு இருக்கிறது
தகவல் தொடர்புக்கு : enuyirthamizha@gmail.com
ஆமாம் இட்லி,தோசை மாவு ஸ்லோ பாய்ஸனாகி கொண்டிருக்கிறது என்பது உண்மைதான்.
ஒரு வயது குழந்தை முதல் தள்ளாடும் வயது வந்தவர்கள் வரை உண்பது "இட்லி, அல்லது தோசை" எனப்படும் தமிழனின் உணவு. இது போக நோயாளிகளும், அறுவை சிகிச்சை செய்தவர்களும் மற்றும் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும் எந்த ஒரு நோயாளிகளுக்கும் பரிந்துரைக்கும் முதல் உணவு வேகவைத்த இட்லிதான்.
இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்னை கொஞ்சமும் இல்லை .இதை கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. பிறகு என்னதான் பிரச்னை என்கிறீர்களா, அது பற்றிய கட்டுரைதான் இந்த பதிவு.
ஒரு காலத்தில் நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம். அதன் பின் அது மிக்ஸி மற்றும் எலக்ட்ரானிக் கிரைண்டராக மாறியது . வாழ்க்கை மாற்றங்களின் காரணத்தால் அதுவும் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகி போனது. சமீபமாக ஒரு முக்கிய திருப்பு முனையாக இட்லி தோசை மாவு ரெடியாக இப்பொழுது பட்டி தொட்டி, அண்ணாச்சி கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. இந்த கால மக்களுக்கு இட்லி மாவு அரைப்பது எப்படி என்பதே மறந்து போயிடுச்சு என்று சொல்லாம்
முன்பாவது திடீர் டிபன் ரவா உப்புமாதான். இப்பொழுது நம்ம வீட்டு சின்ன சிறுசுகளிடம் ஒடி போய் ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு தெருமுனை கடையில வாங்கி வா" என்று சொல்லி, அந்த மாவை இட்லி தோசை ஊத்தி மிச்சத்தை பிரிஜ்ஜில் வைத்து அது முடியும் வரை உபயோகிக்கிறார்கள். இதை பேச்சுலர்ஸ் மட்டுமல்ல குடும்ப பெண்களும் அன்றாடம் பயன்படுத்துகிறார்கள்
இந்த மாவு ஒரு உயிர்கொல்லி, ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோ நிறைய பேருக்கு தெரிவதில்லை. இதன் பயங்கரத்தை இங்கு பார்ப்போம் வாருங்கள்...
Food Poison: Watch How "Dosa Maavu" in packets are made?
1. நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ப்ளோர் -Wet Flour (ஈர பத தோசை மாவிற்கு) ஐ எஸ் ஐ -ISI சான்றிதழ் கிடையாது. அதனால் இது எந்த ஒரு ஆராய்ச்சி கூடத்திலும் சோதனை செய்யப்படவில்லை.
2. இந்த மாவு சில மட்டமான அரிசியும், உளுந்தும், முக்கியமாக மாவுக்கு முன் காலத்தில் புண்ணுக்கு பயன்படும் போரிங் பவுடர் மற்றும் ஆரோட் மாவு போடுவதால் மாவு பூளிப்பு வாசைனை கண்டிப்பாக வராது. அது போக மாவும் பொங்கி நிறைய வரும் என்பதால் இதை செய்கின்றனர். இதே மாதிரி வீட்டில் அரைத்த மாவை ரெண்டு நாள் வைத்து மூணாவது நாள் முகர்ந்து பாருங்கள். புளிப்பு வாசைனையும் வரும். தோசையும் புளிக்கும். ஏனென்றால் மாவு பக்குவமாவதும், தயிர் உறைவதும் ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். இதை தவிர்க்கத்தான் கடையில் வாங்கும் மாவுக்கு 6 நாள் கியாரன்டி அளித்தும் ஒரு வாசனையும் வராமல் இருக்க காரணம் புண்ணிற்கு போடும் போரிங் பவுடரும், ஆரோட் மாவும்தான்.
3. முக்கியமாக இந்த கிரைண்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவது ஒரு நாளைக்கு 3 –- 6 மணி நேரம் அரைக்க முடியும். ஆனால் இவர்கள் 12- – 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு பல சமயம் இந்த சிறு கருங்கள் துகள்களால் தான் சமீபமாக நிறைய பேருக்கு சிறு நீரகத்தில் கல் உண்டாகிறது. ஒரு நல்ல கல்லின் ஆயுள் 12 மணி நேரம் அரைத்தால் வெறும் 6 மாதம் தான். கொத்தி போட்டாலும் அடுத்த மூன்று மாதம் தான்.
4. சமையல் செய்யும் ஆட்கள் கை அடிக்கடி கழுவ வேண்டும். நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு சுத்ததையும் இவர்கள் பேணுவதில்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கிருமிகள் இந்த மாவில்கெட்ட பேக்டிரியாக்கள் மற்றும் கிருமிகள் ஈஸியாக சேர்ந்து உங்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைந்து மற்றும் வாந்தி பேதி அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்க்கு இது தான் காரணம்.
5. கிரைண்டரை எனக்கு தெரிந்து பெண்கள் பயன்படுத்த தயக்கம், இரண்டு விஷயங்கள். 1. கிரைண்டரை சுத்தம் செய்யும் கஷ்டம் 2. கல்லை துாக்கி போட வேண்டும். ஒவ்வொரு முறையும், பெரிய குடும்பமென்றால் இது சாத்தியம். சிறு குடும்பம் அதனாலயே கடையில் மாவு வாங்குகிறது. ஆனால் இவர்கள் கிரைண்டரை ஒவ்வொரு மாவு முடிந்தும் கழுவுவதில்லை அதனால் அந்த கிரைண்டரின் கிருமி அதிகரித்து கொண்டே செல்கிறது. இவர்கள் வணிக ரீதியாக பயன்படுத்த ஒவ்வொரு முறையும் சூடு நீர்(Hot Water) உற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், இவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை கழுவினாலே அதிகம். மாவு பொருட்களினால் எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசிக்க கண்டிப்பாக சாத்தியம் உண்டு.
6. என்னதான் நல்ல அரிசி, உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர்தான் ஊற்றி மாவு அரைக்க வேண்டும். இவர்கள் எந்த தண்ணீரை உபயோகப்டுத்துகின்றனர் என்பது கடவுளுக்கு கூட தெரியாது. எனக்கு தெரிந்த தகவல் படி இவர்கள் போரிங் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை ஊற்றுகின்றனர். காரணம், உப்பு போட வேண்டிய அவசியமில்லை.
7. அந்த கால பார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கை ஆன்டி பயாடிக். உடம்பு உஷ்ணம், வாய் நாற்றம், அல்சர்க்கு இது ஒரு நல்ல பொருள். ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.
8. கிரைண்டரில் மாவு தள்ளிவிடும் அந்த பைபர் பிளாஸ்டிக்கை ஆறு மாதத்திற்க்கு அல்லது வருடத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ஆனால், இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள். அதனால் அந்த பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து அதுவும் இந்த மாவில்தான் விழுகிறது.
9. கிரைண்டர் ஒட அந்த மத்திய குழவியை இணைக்கும் ஒரு செயின். அந்த செயினை இவர்கள் கழட்டி ஒரு கார்பன்டம் பெல்ட்டை மாட்டி இருப்பார்கள். ஒன்று சத்தம் வராமல் இருபதற்கும் மற்றும் மாவை கையால் தள்ளி விடாமல் அரைக்கும் டெக்னிக்கிற்காக. அந்த பெல்ட் தண்ணீர் பட்டு பட்டு அந்த பெல்ட் துகள்களும் மாவில்தான் விழுகிறது.
10. இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை செய்கின்றனர். நமது தமிழ் நாட்டு கிளைமேட்படி இதை பிரிட்ஜில் தான் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை கட்டுபடுத்த முடியும். ஆனால் நம்மூர் கடைகளில் கரண்ட் கட் பிரச்னையில் இந்த மாவு கண்டிப்பாக பாய்ஸனாகிறது.
இந்த மாவில் நிறைய இடங்களில் இப்பொழுது பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிறைச்சிகளில் காணப்படும் ஈகோலி (E-COLI) எனும் பாக்டீரியா பரவி சிலருக்கு உடனே பிரச்னையும், சிலருக்கு இந்த மாவுகள் ஸ்லோ பாய்ஸனாகவும் உருவாகிறது. இந்த ஈகோலி - 24 மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால்தான் கொஞ்சமாவது கட்டுப்படும்.
அதனால் தயவு செய்து விற்பனை செய்யும் மாவில் 6 நாள் கியாரண்டியில் ஈரமான இட்லி, தோசை மாவை கண்டிப்பாக வாங்குவதை தவிருங்கள். உலர்ந்த மாவு பரவாயில்லை. இதே மாதிரி சிலர் மாவரைத்து நான்கு அல்லது ஐந்து பேர் ஷேர் செய்யும் தாய்மார்களும் கண்டிப்பாக கவனம் தேவை.
இப்பொழுது இது ஒரு அங்கிகரிக்கபட்ட தொழில் அல்ல. அதனால் மாநகராட்சி ரெய்டு செய்து மாவு அரைக்கும் இடங்களில் எல்லாம் கையகப்படுத்துகிறது. என்னதான் கையகப்படுத்தினாலும் எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது அல்லவா....! வெந்த இட்லியிலும் சில வேகாத விஷயங்கள் இது.
உண்மையை போட்டு உடைக்கும்
உங்கள் குத்தூசி
முன்பு தமிழ் நாளிதழில் வந்த செய்தியை வைத்து இந்த பதிவு எழுதப்பட்டு இருக்கிறது
தகவல் தொடர்புக்கு : enuyirthamizha@gmail.com
அற்புதமான தகவல்கள் நண்பரே ஆனால் இதைப்படிப்பவர்கள் இதை கடைப்பிடிக்க வேண்டும்.
ReplyDeleteஇன்று மருத்துவமனையில் கூட்டம் கூடுவதின் அடிப்படையே இதுதான்.
நிச்சயமாக நான் இனி கடையில் மாவு வாங்குவதை வீட்டில் தடுப்பேன் இது உறுதி நண்பா.
கில்லர்ஜி
தேவகோட்டை
நம் உடல் நலம் நாம்தான் காக்க வேண்டும... பிரச்சனை ஆன பின் டாக்டரிடம் சென்று பணத்தை கொட்டி அதன் பின் சமுகத்தை குறஒ சொல்லுவதில் பயன் இல்லை.. வருமுன் காக்க வேண்டும்
Deleteபொதுவாக கடையில் வாங்குவதில்லை. வீட்டிலே அரைப்பது தான். நல்லதொரு எச்சரிகை பதிவு.
ReplyDeleteஉங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வெங்க்ட் சார்.. உங்களின் பல பதிவுகளை நான் படித்து இருக்கிறேன்
Deleteஉபயோகமான தகவல். நன்றி. நான் வீட்டில்தான் அரைக்கிறேன்.
ReplyDeleteஉங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திருமதி.பானுமதியம்மா
Delete