Showing posts with label known and unknown things. Show all posts
Showing posts with label known and unknown things. Show all posts

Saturday, August 22, 2020

விநாயகப்பெருமானை பற்றிய பல அறிந்த அறியாத விஷயங்கள்.

known and unknown things about Lord Ganesha.


அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.... இந்த வாழ்த்தோடு பிள்ளையார் பற்றி அறிந்த அறியாத செய்திகள் பலவற்றை இங்கு பகிர்கின்றேன்.


 விநாயகப்பெருமானை பற்றிய பல அறிந்த அறியாத விஷயங்கள்.



விநாயகர் என்பதன் பொருள் {நாதமும் விந்துவும்}
விநாயகர் என்ற சொல்லுக்கு “வி” – இல்லாமை. “நாயகன்” – தலைவன். விநாயகர் – மேலான தலைவர், தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் என்று பொருள்.


ஓம் அநீஸ்வராய நம: என்னும் மந்திரத்திற்கு – தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லாதவர் என்பதே பொருள். ஸ்ரீ ஆதி சங்கரர் தாம் அருளிய கணேச பஞ்சரத்னத்துள் “அநாயகைக நாயகம்”என்று கணபதியைப் போற்றுகின்றார். அநாயக-ஏக-நாயகம்= அதாவது தனக்கு மேலோரு நாயகரில்லாமல் தானே ஏக நாயகனாக இருப்பவர் என்பது இதன் பொருள். வழிபடுவோரின் விக்கினங்களை {இடையூறுகளை} போக்குபவராதலின் இவருக்கு விக்னேஸ்வரன் என்றும் கணங்களுக்குத் தலைவராயிருப்பதால் கணநாதன், கணபதி என்று அன்புடன் வணங்கப்படுகிறார்.

  

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள்

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள் பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவர...